அடித்துக் கொள்வர்
மொழியின் பேரால்
சிங்களர் என்றும் தமிழர் என்றும்
ஓர் மொழியானவரும்
பார்ப்பனரென்றும் பிறரென்றும்
ஆதிக்கசாதியும் தாழ்த்தப்பட்டும்
மொழி தாண்டி சாதி தாண்டி
மதம் பிடித்து
இந்துவென்றும் முஸ்லீமென்றும்
ஒரே மதத்தின் நாடு
ஆனாலும் விலக்கல்ல
சுன்னியென்றும் ஷியாவென்றும்
மதமெல்லாம் பின் தள்ளி
அப்படியே அப்படியே
முதலாளியும் தொழிலாளியும்
கட்சிக்கும் கொடிக்கும்
நாற்காலிக்கும் அதிகாரத்துக்கும்
வெற்றிக்கும் வோட்டுக்கும்
கருப்பரென்றும் வெள்ளையெரென்றும்
வளர்ந்த நாடும் மூன்றாமுலகமும்
இன்னமும் இன்னமும்
மண்ணாசை பெண்ணாசை
பொன்னாசை போய்ச் சேர்ந்து
எண்ணெய்க்கும் சண்டை
காரணமே இல்லாவிடினும்
காரணத்தை தோண்டித்தேடி
காழ்ப்புணர்வை உருவாக்கி
அணு ரசாயண
ஆட்கொல்லி ஆயுதங்கள்
புதிது புதிதாக
என்றைக்கும் என்றைக்கும்
அடித்துக் கொல்லவே
அவதரித்த மனிதகுலம்
Thursday, February 11, 2010
அடித்துக் கொள்வர்
Subscribe to:
Post Comments (Atom)


17 comments:
//மண்ணாசை பெண்ணாசை
பொன்னாசை போய்ச் சேர்ந்து
எண்ணெய்க்கும் சண்டை//
உண்மை பட்டியன் அருமையா எழுதீருக்கீங்க
ரொம்ப நன்றி தேனம்மை
ஏதோ தோணினதை எழுதி வைத்தேன்
உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்....
//அடித்துக் கொல்லவே
அவதரித்த மனிதகுலம்//
உண்மை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமலேஷ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சின்ன அம்மணி
ஏதாவது ஒன்றிற்காக எப்போதும் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது மனிதவிலங்கு.
வாங்க உழவன், நன்றி
நான் கவிதையில சொன்னதை, நீங்க ஒரே வரியில அட்டகாசமா சொல்லீட்டிங்க..
//ஏதாவது ஒன்றிற்காக எப்போதும் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது மனிதவிலங்கு//
உண்ண்ண்ண்மை....!
Nice kavithai Pattiyan.
நிஜத்தைச் சொல்லும் வரிகள் , நன்றாக இருக்கிறது.
நன்றி முனியப்பன் பக்கங்கள் MP??? :)
நன்றி த.ஜீவராஜ்
அருமை
நன்றி தியாவின் பேனா
உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்........
உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்...
உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்....
உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்....
உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்....
Post a Comment